உலக தாய்ப்பால் வாரம்; தான் பெற்றால் தான் குழந்தையா? கோவைக்கு பெருமை சேர்க்கும் தாய்மார்கள்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதன் பங்கு மற்றும் தாய்ப்பால் வழங்க முடியாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து உயிர்காக்கும் பெண்களின் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.