ஆடி வெள்ளி- கோவையில் பாம்பு புற்று வேப்பிலை வனம் போன்று அலங்கரிக்கப்பட்ட மாகாளியம்மன் கோவில்

கோவை தேர்முட்டி பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் நான்காவது ஆடி வெள்ளியை முன்னிட்டு நவதானிய ராகு கேது சர்ப்ப அலங்காரம், வேப்பிலை வன அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.