கோவையில் தடகள போட்டிகள் துவக்கம்…

கோவை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெற்கு மண்டல தடகளப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.