“கலங்குகிறது உலகு” போர் குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள கவிதை!

உலக நாடுகளில் போர் பதற்றம் திவிரமடைந்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து X தளத்தில் வெளியிட்டுள்ள கவிதை:-

உலகின் தலையில்
மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது
அணுகுண்டு

“வக்கிர மனங்களால்
உக்கிரமாகுமோ யுத்தம்”
கலங்குகிறது உலகு

Advertisement

Single Content Ad

ஈரானின்
அணுசக்தித் தளங்களில்
டொமாஹக் ஏவுகணைகள்வீசி
அவசரப்பட்டுவிட்டது
அமெரிக்கா

வல்லரசுகள்
நல்லரசுகள் ஆகாவிடில்
புல்லரசு ஆகிவிடும்
பூமி

தான் கட்டமைத்த நாகரிகத்தைத்
தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள்
என்ன செய்தன?

போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

அணுகுண்டு முட்டையிடும்
அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத்
திரும்பட்டும்
– கவிஞர் வைரமுத்து

Advertisement

Advertisement

Recent News

Single Sidebar Ad

Latest Articles