Header Top Ad
Header Top Ad

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை Sabarimala ஐயப்பன் கோயில் நடை இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. சிறப்புப் பூஜைகளுடன், டிசம்பர் 26ம் தேதி பகல் 12.30 மணியளவில் மண்டல பூஜையும் நடத்தப்பட்டது. அதன்பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டது.

Advertisement
Lazy Placeholder

இந்த காலகட்டத்தில் கேரளா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மீண்டும் திறப்பு

இதன் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் கோயில் நடை அடைக்கப்பட்டது.

Advertisement
Lazy Placeholder

இந்த நிலையில், இன்று முதல் கோயில் நடை திறக்கப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. தமிழில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இன்று மாலை ஐயப்பனுக்கு அபிஷேகத்துடன் சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த 5 நாட்களுக்கு (பிப்ரவரி 17ம் தேதி வரை) கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் இந்த காலகட்டத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

Recent News

Latest Articles