கோவையில் மாநாடு – தமிழ்நாடு அரசு பெருமிதம்

கோவை: கடந்த 9ம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த உலக புத்தொழில் மாநாடு குறித்து தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 43 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன், 30,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், மத்திய அரசின் 10 துறைகள், மாநில அரசின் 15 துறைகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற முதலமைச்சரின் கனவை நனவாக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற புத்தொழில் மாநாடு அமைந்தது.

Advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த புத்தொழில் மாநாடு மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

கோவை உலக புத்தொழில் மாநாட்டில் 45 நாடுகளைச் சேர்ந்த 115 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். இந்த மாநாடு மூலமாக 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அதன் மூலம் ரூ.127 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

2030ல் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்,

என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டெங்கு கொசுப் பரவல்- கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி 50,000 அபராதம்…

கோவை: டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்ப கட்டிட உரிமையாளருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயர்கள்....

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...