மாடியில் நடைப்பயிற்சி செய்கிறீர்களா கவனம்; கோவையில் முதியவர் பரிதாப பலி!

கோவை: பீளமேட்டில் 3வது மாடியில் நடைப்பயிற்சி சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீளமேடு அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கே மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 72 )மற்றும் அவரது மனைவி வனஜா குமாரி ஆகியோர் அவர்களது மகள் வீட்டில் குடியிருந்து வந்தனர்.

தினமும் இருவரும் காலை-மாலை நேரத்தில் குடியிருப்பின் 3வது மாடியில் உள்ள மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இருவரும் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி சென்று உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஸ்வரன் திடீரென கால் இடறி மொட்டை மாடியில் கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வனஜா செல்வி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அகற்றப்படும் அரசியல் விளம்பரங்கள்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து கோவையில் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் இருந்த அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...