கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 20 மாவட்டங்களில் இன்று இரவுக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவையில் மலைப்பகுதிகளிலும், நகரின் ஒரு சில இடங்களிலும் இன்று லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 20 மாவட்டங்களில் இன்று இரவுக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

அந்த மாவட்டங்கள் பின்வருமாறு:-
- கோவை
- திருப்பூர்
- நீலகிரி
- திருவாரூர்
- தென்காசி
- தேனி
- விருதுநகர்
- தூத்துக்குடி
- நெல்லை
- கன்னியாகுமரி
- தஞ்சாவூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- அரியலூர்
- கடலூர்
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- மதுரை
- திண்டுக்கல்
ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.