கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம், காதலருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி, 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.
இதனிடையே நேற்று, விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். இதில் 4 பேர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகினர்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
மேலும் இதுபோன்ற முக்கியச் செய்திகளுக்கு News Clouds Coimbatore ஐ பின்தொடருங்கள்.

