கோவையில் ரூ.118 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

கோவை: கோவையில் ரூ.118 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைகளில், ரூ.118 கோடிக்கும் அதிக மதிப்புள்ள அரசு மற்றும் OSR (Open Space Reserve) நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

மண்டல வாரியான நடவடிக்கைகளில், வடக்கு மண்டலத்தில் அதிக அளவில் 231 ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதாவது, 23,786.79 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.33.08 கோடி.

இதேபோல், மேற்கு மண்டலத்தில் 35 ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, 9,286.84 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலத்தின் மதிப்பு ரூ.48.85 கோடி.

மேலும், கிழக்கு மண்டலத்தில் 7 ஆக்கிரமிப்பு நிலங்களில் மொத்தம் 2,995 சதுர மீட்டர் நிலமும், மத்திய மண்டலத்தில் 4 ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு முறையே ரூ.24.18 கோடி மற்றும் ரூ.4.25 கோடியாகும்.

Special camp for collecting large household waste items like mattresses, sofas, and furniture organised by Coimbatore Corporation

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் 4 ஆக்கிரமி நிலங்களில் 2,543 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.7.78 கோடி என.

இதில் OSR நிலங்களை மாநகராட்சியின் பெயருக்கு மாற்றும் பணிகள் தற்போது வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நில விவரங்கள் அனைத்தும் மாநகராட்சி இணையதளம் மற்றும் ‘Namma Kovai’ செயலியில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. GIS (Geographic Information System) குழு இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், பொதுமக்கள் வரைபட அடிப்படையிலான வசதியின் மூலம் OSR நிலங்களின் இருப்பிடம் மற்றும் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...