கோவை தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை: கோவை தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனியர் சூப்பிரண்டு தபால் அலுவலக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Advertisement

கோவை தபால் பிரிவின் அரையாண்டு (31.12.2025 முடிவடையும்) ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 11 மணிக்கு கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே ஓய்வூதியம் தொடர்பான ஏதேனும் குறைகள் உள்ள தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை அணுகலாம். தங்கள் குறைகளை மனுவாக சீனியர் சூப்பிரண்டு தபால் அலுவலகம், கோவை 641 001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவோ, அல்லது docoimbatore.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மனுக்கள் வரும் 20ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

கோவையில் மூதாட்டிக்கு நடந்த கொடுமை- குற்றவாளிக்கு நீதிபதி வழங்கிய தீர்ப்பு…

கோவை: கோவையில் 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகையை பறித்துச் சென்ற குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை சூலூர் அடுத்த பாப்பம்பட்டிபிரிவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (25)....

Video

Join WhatsApp