கோவை: கோவையில் நடு ரோட்டில் ஸ்கார்பியோ கார் ஒன்று திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலந்துறையில் இருந்து பேரூர் செல்லும் சாலையில் ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் செல்லப்பம்பாளையம் அருகே வந்தபோது, திடீரென இன்ஜினில் இருந்து புகை வெளியேறியது.
இதனால் வாகன ஓட்டி உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்தினார். அப்போது அந்த காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி சென்றதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வீடியோ காட்சிகள்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

