கோவை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், செயின்ட் மைக்கல்ஸ் மேல்நிலைபள்ளி (St. Michael’s Higher Secondary School) பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-II மற்றும் || A பணிகள்) தேர்வு நடைபெறவுள்ளதால் தேர்வர்கள் கவனத்திற்காக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்வு மையத்தின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், தேர்வர்கள் எளிதாக செல்லும் பொருட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் (May I Help You) TNPSC சிறப்பு உதவி மையம் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக உதவி மைய தொடர்பு எண் 0422-2301114, 0422-2301115, 0422-2301116, காவல் துறை உதவி மைய தொடர்பு எண் மாநகர் காவல் (Commissioner Of Police) 0422-2300970 9498181213 கோயம்புத்தூர் மாவட்ட நகர பேருந்து மற்றும் ஊரக நிலைய TNPSC உதவி மையம் எண் ஏசுதாஸ் கோகுலகிருஷ்ணன் -94425 01929, 8825772866 மற்றும் தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

