கைதானவர்களிடம் இருந்து நகை, பணம் கையாடல்: கோவை போலீஸ் எஸ்.ஐ கைது!

கோவை: பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்த நகை மற்றும் பணத்தை கையாடல் செய்த புகாரில் போலீஸ் எஸ்.ஐ கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Advertisement

இதில் மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த நகை மற்றும் பணத்தை நவநீதகிருஷ்ணன் பறிமுதல் செய்துள்ளார்.

பறிமுதல் செய்த 18 பவுன் நகை மற்றும் பணத்தை நவநீதகிருஷ்ணன் பதுக்கியுள்ளார். இந்த விஷயம் உயரதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இந்த நிலையில், நவநீதகிருஷ்ணனை கைது செய்ய காவல் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போலீஸ்காரர் ஒருவரே நகை, பணத்தை கையாடல் செய்து, தற்போது கைதாகியுள்ள சம்பவம் சக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...