கோவை: கேரள மாநிலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பாட்னா செல்லும் சிறப்பு ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
போத்தனூரில் இருந்து பீஹாருக்கு ஒரு மாதத்திற்கு வாரந்திர சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனிடையே எர்ணாகுளம்–பட்டினா சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
Advertisement

எர்ணகுளம்- பாட்னா (ரயில் எண் 06085) ஏப்ரல் 25ம் தேதி முதல், மே 3ம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் இரவு 11.00 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு, திங்கள் காலை 3.30 மணிக்கு பட்னா சென்றடையும். மொத்தம் 6 சேவைகள்.
இதே போல் ஏப்ரல் 28ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை திங்கட்கிழமை நாட்களில் (ரயில் எண் 06086) இரவு 11.45 மணிக்கு பட்னாவிலிருந்து புறப்பட்டு, வியாழன் காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இதுவும் 6 சேவைகள்.
ரயில் வசதிகள்
- AC 2-டையர்
- AC 3-டையர்
- ஸ்லீப்பர் வகுப்பு
- பொது வகுப்பு
- மாற்றுத்திறனாளி வகுப்பு
நிறுத்துமிடங்கள்
- அலுவா
- திருச்சூர்
- பாலக்காடு
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- ஜோலார்பேட்டை
- கட்பாடி
- பேரம்பூர்
- விஜயவாடா
- ராஜமுந்திரி
- விசாகப்பட்டினம்
- சிக்கிம்
- பாட்னா சாஹிப்
- மேலும் பல முக்கிய நிலையங்கள்.
சேலம் கோட்டத்திற்கு ரயில் வரும் நேரம் (வண்டி எண்: 06085)
கோயம்புத்தூர் – 03.25 / 03.30
திருப்பூர் – 04.15 / 04.20
ஈரோடு – 05.05 / 05.15
சேலம் – 06.12 / 06.15
ஜோலார்பேட்டை – 08.00 / 08.10
மறுமார்க்க ரயில் சேலம் கோட்டத்திற்கு வரும் நேரம் (வண்டி 06086)
ஜோலார்பேட்டை – புதன் 22.00 / 22.10
சேலம் – 23.52 / 23.55
ஈரோடு – வியாழன் 00.55 / 01.05
திருப்பூர் – 02.33 / 02.35
கோயம்புத்தூர் – 03.37 / 03.40
இந்த சிறப்பு ரயில் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, ரயில்வே தளத்தை பார்க்கலாம்.