கோவையில் முள்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு…

கோவை: கோவை அருகே முள்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் மொடமாத்தி சுற்றுக்கு உட்பட்ட போலுவம்பட்டி வனப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார்க்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது.

இந்நிலையில் தோட்டத்திலிருந்து வெளியே வரும் பகுதியில் நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பழைய முள்கம்பி வேலியில் பெண் சிறுத்தை ஒன்று மாட்டி உயிரிழந்துள்ளது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்தனர். உடற்கூராய்வு முடிவுகள் வந்த பிறகு கூடுதல் தகவல்களை வெளியிடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முள்கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.