கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் கலைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கோவை: கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினர்.

மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் 10 நாட்களுக்கு முன்பே பண்டிகையானது துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஓணம் பண்டிகை தற்பொழுது கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான கேரள மாணவர்களும் தமிழக மாணவர்களும் ஒன்றாக இணைந்து மலையாள மக்களின் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் திருவாதிரை களி நடனம், மகாபலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து செண்டை மேளம், பலவண்ண காவடிகள் உட்பட சினிமா பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை…

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.