கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் கலைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கோவை: கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினர்.

மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் 10 நாட்களுக்கு முன்பே பண்டிகையானது துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில் கேரளவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஓணம் பண்டிகை தற்பொழுது கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான கேரள மாணவர்களும் தமிழக மாணவர்களும் ஒன்றாக இணைந்து மலையாள மக்களின் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Advertisement

பின்னர் திருவாதிரை களி நடனம், மகாபலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து செண்டை மேளம், பலவண்ண காவடிகள் உட்பட சினிமா பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group