இரண்டு டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட புலியகுளம் விநாயகர்! – வீடியோ!

கோவை: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகைகளை முன்னிட்டு புலியகுளம் முந்தி விநாயகருக்கு இரண்டு டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

பொதுமக்கள் அவரவர் இல்லங்களில் முக்கனிகளான மா, பலா, வாழையில் கண் விழித்து, புத்தாண்டை வரவேற்றனர். கோவையைப் பொருத்தவரை பல்வேறு கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், ஆசியாவிலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட உயரமான விநாயகர் சிலை கொண்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலிலும் அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

சித்திரக்கனியை முன்னிட்டு முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் அன்னாசி, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆப்பிள் உள்ளிட்ட பழங்களால் விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 2 டன் எடை கொண்ட பழங்களால் இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group