கோவை: கோவையில் திடீரென பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்தநிலையில் கோவை தடாகம் சாலை இடையார்பாளையம், கணுவாய், சாய்பாபா காலனி, வடவள்ளி பகுதிகளில் மாலை கன மழை பெய்தது.
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் அதிகளவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த மழையில் நனைந்தபடி சிரமங்களுடன் வாகனத்தை இயக்கினர். பாதசாரிகளில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.கோவையில் கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று பெய்த மழை குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


today, evening, rain happy Jolly
Super