கோவை: BLO பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களை BLO பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO) பணியாற்றிட அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவாக இருப்பதாகவும் அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த மூன்று மாத காலங்களாக SIR பணியின் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பதாகவும் மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் பல்வேறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களை BLO பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

