கோவையில் 60 அடி உயரத்தில் சிக்கிய 6 மாத பூனைக்குட்டி! – VIDEO

கோவை: கோவை அருகே பூனைக்குட்டி ஒன்று 60 அடி உயர தென்னை மரத்தில் சிக்கிய நிலையில் அதனைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Advertisement

கணியூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் 6 மாத பூனைக் குட்டி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அதனை அங்கிருந்த நாய் துரத்தி உள்ளது.

இதனால் அந்த பூனை 60 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டது. அதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பூனை இறங்கி விடும் என நினைத்து விட்டு விட்டனர்.

இந்த நிலையில் 3 நாட்கள் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பூனை மரத்தில் இருந்து இறங்காமல் அங்கேயே தவித்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement
Rescue operation for stranded cat

பின்னர் இதுகுறித்து கருமத்தம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீட்டிக்கக்கூடிய ஏணியின் உதவியுடன் மரத்தின் உச்சியில் ஏறினர். தொடர்ந்து பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பூனையை ஒரு வாளியில் வைத்து பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில்,

Advertisement

“பூனைகள் 60 அடி உயரம் வரை ஏறுவது அரிதான சம்பவம். இந்த பூனைக்குட்டி, தெரு நாய் துரத்தியதால் அச்சத்தில் மரத்தின் உச்சியில் ஏறியுள்ளது. பின்னர் அதனால் கீழே இறங்க முடியாமல் அங்கேயே தவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக உணவு இல்லாமல் பூனை பசியால் வாடி இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி பூனை மீட்கப்பட்டது.” என்றனர்.

பூனைக்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.