வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி நாளில், கணேசபெருமானுக்கு பிரியமான நெய்வேத்யங்களில் முதன்மையானது லட்டு.
பாரம்பரியமாகவும் சத்தானதாகவும் பல்வேறு லட்டு வகைகள் வீட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் பிரபலமான மூன்று லட்டு வகைகளையும், அவற்றின் எளிய செய்முறைகளையும் இங்கு பார்ப்போம்.
மா லட்டு (பொட்டுக்கடலை லட்டு)
தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை – 1 கப்
- பொடிச்சர்க்கரை – ¾ கப்
- நெய் – ¼ கப்
- ஏலக்காய் – 2
செய்முறை
பொட்டுக்கடலையை நன்றாக வறுத்து, பொடியாக அரைக்கவும். அதனுடன் பொடிச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
சூடான நெய் ஊற்றி கைகளால் உருட்டி உருண்டைகளாக்கினால் சுவையான மா லட்டு ரெடி

தேங்காய் லட்டு
தேவையான பொருட்கள்
- பசுந்தேங்காய் துருவல் – 1 கப்
- வெல்லம் – ¾ கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- ஏலக்காய் – 2
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து பாகு எடுக்கவும். அதில் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
கொஞ்சம் கெட்டியாக வந்ததும் நெய் சேர்த்து உருண்டைகளாக்கினால் போதும். தேங்காய் லட்டு தயாராகிவிட்டது.

இந்த லட்டுகள் குழந்தைகளுக்கு சத்தானதாகவும், அவர்கள் விரும்பி உண்ணத் தக்கவையாகவும் இருக்கும். எளிய இந்த ரெசிபியை விநாயகர் சதுர்த்தி நாளில் செய்து அவர்களை அசத்திடுங்கள்.