கோவை: திமுக.,வில் இருந்து விலகி எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டோர் அதிமுக.,வில் இணைந்தனர்
சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்ற மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நிகழ்வில் திமுக.,வில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் கட்சித் துண்டு அணிவித்தும், நலத்திடங்களை வழங்கியும் கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் சுப்பையன், பகுதி கழக செயலாளர் மாரிச்சாமி, வட்டச் செயலாளர்கள் சுரேஷ், மாரப்பன், காளிச்சாமி, ஜெயக்குமார், ஐ டி விங் மணிகண்டன், குணசேகரன், கிருஷ்ணவேணி உள்பட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

