கோவை அருகே பலா மரத்தை சுற்றி வந்த யானை…

கோவை: கோவை அருகே பலா மரத்தில் இருந்த பழங்களை ருசி கண்ட யானையின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்ளுக்குள் உணவுப் பொருட்களை தேடி காட்டு யானைகள் புகுகின்றன. அவ்வாறு ஊருக்குள் புகும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.

அதனை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறுகிறது.

Advertisement

இந்நிலையில் பெரிய தடாகம் அருகே சுஜாதா கார்டனில் பகுதியில் உள்ள சுரேஸ்பாபு என்பவர் வீட்டின் பின்புறத்தில் இருந்த பலா மரத்தில் இருந்த பழங்களை பறித்து தின்றுள்ளது. அந்த சத்தம் கேட்டு சென்ற சுரேஷ்பாபு வீட்டின் மாடிக்கு சென்று டார்ச் லைட் அடித்து பார்த்த போது யானை நின்று கொண்டு இருந்துள்ளது.

அதனை தனது செல்போனை வீடியோ பதிவு செய்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாகி வருகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...