கோவை: கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட 7 மாவட்டங்களில் இன்று மழை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று கோவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனிடையே இன்று, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Advertisement

கோவை நகரில் இன்று மதியம் வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மலைப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியத்திற்கு மேல் மழை எப்படி இருக்கும் என்பதை, வானிலை மையம் வழங்கும் அடுத்த அப்டேட்டின் அடிப்படையில் தெரிவிக்கிறோம்.