கரும்பு விவசாயிகள்: சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்தது தமிழக அரசு!

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக கரும்பு விலையை உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்சியரிடமும், சென்னை தலைமைச் செயலகத்திலும் விவசாயிகள் மனு அளித்திருந்தனர்.

இதனிடடையே 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 349 ரூபாய் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூபாய் 297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சிறப்பு ஊக்கத் தொகையால் 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்க தொகையாக 4,79,030 விவசாயிகளுக்கு ரூபாய் 848.16 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

உதயநிதியைக் கண்டித்து தவெக எம்எல்ஏ.,க்கள் ஆர்ப்பாட்டம்!

பெண்களை அவமதிக்கும் வகையில் பேச்சு இடம்பெற்றதாக குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை திரு.வி.க. நகரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.