Header Top Ad
Header Top Ad

மாணவர்களே… 75% வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே தேர்வுக்கு அனுமதி!

சென்னை: CBSC பள்ளிகளில் 75% வருகைப் பதிவு இருந்தாலே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSC பள்ளிகளில், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளி நாட்களில், குறைந்தது 75% வருகைப்பதிவு வைத்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ விடுப்பு, விளையாட்டு வீரர்களுக்கான OD உள்ளிட்டவற்றுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், எழுத்துப்பூர்வ விண்ணப்பங்களுடன் தேர்வு எழுத சிறப்பு அனுமதி தரப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே CBSC பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக லீவ் போடாம Schoolக்கு புறப்படுங்க.

Advertisement

Recent News