கோவை: பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழா, டாக்டர் உஷா மேத்தா அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர். என். ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான கோவி செழியன் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவின் முதன்மை விருந்தினராக ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் காமாட்சி முதலி பங்கேற்று பட்டமளிப்பு உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறைச் செயலாளரும், துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர். பி. சங்கர், வரவேற்பு உரையாற்றியதோடு, பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த விழாவில், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த முனைவர் பட்டம் (Ph.D) மற்றும் டி.லிட் (D.Litt) பட்டதாரிகள் சுமார் 1500 பேர் நேரடியாக பட்டங்களைப் பெற்றனர்.
மேலும் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு என 92 ல்,287 பேர் பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டங்களை பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பதிவாளர் முனைவர் ஆர். ராஜவேல், தேர்வாணையர் முனைவர் கே. விஜயராணி மற்றும் பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்டனர்.

