நகை பறிக்க முயன்றவரை மடக்கிப் பிடித்த கோவை சிங்கப்பெண்

கோவை: கோவையில் தன்னிடம் நகை பறிக்க முயன்ற நபருடன் போராடி அவரை போலீசில் பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி தீபா (48). இவர் வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை, தீபா ஆவாரம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசா நகருக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் வந்தார். திடீரென்று அந்த வாலிபர் தீபாவின் கழுத்தில் கிடந்த தங்க தாலி செயினை பிடித்து இழுத்தார்.

உடனே சுதாகரித்துக் கொண்ட தீபா, செயினை பறிக்க விடாமல் இழுத்துப் பிடித்தார். மேலும், அந்த நபருடன் போராடினார். அதோடு “திருடன் திருடன்” என்று சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் திரண்டபோது, பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். அதன் பின்னர் அந்த வாலிபரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் தங்க செயினை பறிக்க முயன்றது கேரள மாநிலம் மலப்புறம் பகுதியைச் சேர்ந்த முகமது அமீன் (23) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விஜய் முதல்வர் தான், துணை முதல்வர் அல்ல- கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: விஜய் முதல்வராகத்தான் வந்துள்ளாரே தவிர துணை முதல்வர் ஆவதற்கு இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.