கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை: கோவையில் தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் சாலையோரத்தில் குறட்டை விட்டு உறங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் நேற்று மாலை கார் ஒன்று வேகமாகவும், தாறுமாறாகவும் வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

எதிர்பாராத நேரத்தில் அந்த கார் திடீரென நிலை தடுமாறி, சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.

மேலும், சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தொடர்ந்து காரில் இருந்து வெளியேறிய நபர், தலைக்கேறிய போதையில் அங்கேயே குறட்டை விட்டு படுத்து உறங்கினார்.

இதனைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கொதிப்படைந்தனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் காவல்துறையினர் சாலையோரம் கவிழ்ந்திருந்த காரை கிரேன் மூலம் மீட்டு கோட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் விசாரணை நடத்தியதில், தலைக்கேறிய போதையில் இருந்த நபர் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பதும், இவர் போதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

தாறுமாறாக கார் வந்த நேரத்தில் எதிரே எந்த வாகனமும் வராததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் அவ்வளவு தான்- கோவையில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் அச்சம்…

கோவை: சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தள்ளுவண்டி கடையினர் உள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடை நடத்த முடியாமல் போய்விடும் வாழ்வாதாரம் பெரியதளவு பாதிக்கப்படும் என்று சாலையோர தள்ளுவண்டி கடையினர்...

Video

கோவையில் சாலையோரம் சுற்றித்திரிந்த காட்டுயானை- ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்த மக்கள்…

கோவை கணுவாய்–தடாகம் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானையை வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.