Coimbatore budget 2026: கோவை மாநகராட்சியில் 2026-27 ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது கோவை மாநகராட்சி. தொழில், கல்வி, விவசாயம் மற்றும் மருத்துவ மையமாக திகழும் கோவை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன்படி, 2026-27ம் நிதி ஆண்டிற்கான மாநகராட்சி பட்ஜெட் இன்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், கோவை மாநகராட்சியின் வருவாய் மற்றும் மொத்த மூலதன வரவினமாக ரூ.4,915.50 கோடி கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
இதேபோல், நடப்பு நிதி ஆண்டில் மாநகராட்சியின் செலவினம் ரூ.5041.71 கோடியாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநகராட்சிக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.126.21 கோடி பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
அதில் ஒன்றுமில்லை
இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மாநகராட்சியின் வளர்ச்சிக்காக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்றும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சொன்ன விஷயங்களையே மீண்டும் குறிப்பிட்டு வெறுமனே கடமைக்கு ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், கடமைக்கு ஒரு பட்ஜெட் வெளியிட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் , ஷர்மிளா ஆகிய இருவரும் வெளிநடப்பு செய்தனர்.

