கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியானது…

கோவை: கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடப்பட்டதில் 6.5 லட்சம் பேர் நீக்கம் செய்யபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகரியுமான பவன்குமார் இன்று வெளியிட்டார்.

அதில் எஸ்ஐஆர் (SIR) பணிகளுக்கு முன்பு, கடந்த 27-10-2025 நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள் பதிவாகியிருந்தனர்.

எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து,6,50,590 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதனால், தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 25,74,608 ஆக உள்ளது.

நீக்கப்பட்ட வாக்காளர்களின் காரணம்,இறந்தவர்கள்– 1,19,489 பேர்,முகவரியில் இல்லாதவர்கள் 1,08,360 பேர்,நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 3,99,159 பேர்,இரட்டை பதிவுகள் 23,202 பேர்,இதர காரணங்கள் 380 பேர்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை பொதுமக்கள் சரிபார்த்து, பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது திருத்தம் தொடர்பான மனுக்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

http://voters.eci.gov.in என்ற இணைய தளத்தில் வாக்காளர்கள் அவர்களது பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வணிக சிலிண்டர்களுக்கு நாமம்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: வணிக கேஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசுதான் காரணம் என்று வலியுறுத்தி கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்...

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...