கடலூர் பள்ளி வேன் விபத்து: இங்கேயும் அதே நிலை தான்… கோவை மக்கள் அஞ்சலி

கோவை: கடலூரில் ரயில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு கோவையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

கோவை: கடலூரில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள சூர்யா நகர், சிவலிங்காபுரம் நகர், காமாட்சி நகர், சக்தி நகர், குடியிருப்போர் நல சங்கம் சார்பில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கருப்பு பேட்ச் அணிந்து உயிரிழந்த மாணவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மக்கள் இது போன்ற ஒரு சம்பவம் இனிமேலும் நிகழாத வண்ணம், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ரயில்வே கேட் உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்காக மேம்பாலங்களை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 COMMENTS

Comments are closed.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group