கோவை: கோவையில் 1.05 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி மேயர் துவக்கி வைத்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு,மேற்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.29-க்குட்பட்ட கணபதி புதூர் முதல் வீதியில் மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், கணபதி மோர் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும்,
கட்டபொம்மன் வீதி, காந்தி நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், மீனாட்சி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்கா மற்றும் பூம்புகார் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பினை மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிக்கும் பணியினையும்,
கணபதி, குமரன் நகர், கொரத்தோட்டம். வி.என். நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், துவக்கி வைத்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது, உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

