கோவையில் பணிக்கு சேர்ந்தவுடன் உரிமையாளரின் காரை லவட்டிய தந்தை-மகன்!

கோவை: கோவையில் பணிக்கு சேர்ந்த 15 நாட்களில் ஓட்டல் உரிமையாளரின் காரை காய்கறிகளுடன் திருடி சென்ற தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

வடவள்ளி கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (49). இவர் பீளமேடு கருணாநிதி நகர் தனியார் மருத்துவமனை அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவரது ஓட்டலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டை சேர்ந்த கந்தன் (58) மற்றும் அவரது மகன் சதீஷ் (36) ஆகியோர் பணிக்கு சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் ஓட்டலில் காய்கறி உட்பட பொருட்கள் வாங்க ஒரு கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் டிரைவராக விக்னேஷ் என்பவர் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் விக்னேஷ் காரில் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்து ஓட்டல் முன் நிறுத்தினார். அதில் தனது செல்போனையும் வைத்து விட்டு ஓட்டலுக்குள் சென்றார்.

Advertisement

சிறிது நேரம் கழித்து பிரகாஷ் வெளியே வந்து பார்த்த போது கார் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே விக்னேசை அழைத்து கார் குறித்து கேட்டார். அதற்கு அவர் தான் காரை எங்கும், எடுத்து செல்லவில்லை, ஓட்டல் முன் தான் நிறுத்தி இருந்தேன் என தெரிவித்தார்.

அதன் பின்னர் பிரகாஷ் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிவிடி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஓட்டலில் பணிபுரிந்து வந்த தந்தை மகன் கந்தன், சதீஷ் ஆகியோர் காரை காய்கறிகளுடன் திருடி சென்றது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து பிரகாஷ் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை செல்போன், காய்கறியுடன் திருடி சென்ற தந்தை, மகனை தேடி வருகின்றனர்.

Amazon Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...