கோவையில் புக் ஸ்டாலில் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது!

கோவை: கோவையில் உள்ள புக் ஸ்டாலில் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் (25). இவர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் புக் ஸ்டால் நடத்தி வருகிறார்.

Advertisement

இவர் நேற்று வழக்கம் போல கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த நபர் தான் நிருபர் என்றும், ரூ. 5 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பிரவீன் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்றுள்ளார். அதற்கு அந்த நபர் பணம் தரவில்லை என்றால் உனது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி விற்பதாக, தனது நாளிதழில் எழுதி விடுவேன் என்று தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார்.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடைக்காரரை மிரட்டிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அந்த நபர் ரத்தினபுரி, வ.உ.சி வீதியைச் சேர்ந்த பிரபு (48) என்பதும், அவர் போலி நிருபர் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிரவீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Recent News

துவங்கியது கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா…

கோவை: கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இதனை இன்று தமிழ் வளர்ச்சி...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp