கோவையில் இலவச மின் இணைப்பு கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு!

கோவை: கோவையில் இலவச மின் இணைப்பு வசதி கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டில், விவசாயிகளுக்காக அரசு வழங்க வேண்டும் என்று கூறிய 50,000 இலவச மின் இணைப்புகளில் தற்போது வரை 15,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில்,
தமிழக “பட்ஜெட்டில் 50,000 இலவச மின் இணைப்புகள் தருவோம் என்று அரசு அறிவித்தது. ஆனால் மின்வாரியம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வழங்கிய பதிலில் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

1.75 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். மின்சாரம் இல்லாததால், பயிர் இட முடிவது இல்லை.

மழைக்காலத்திலும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது” என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறும்போது, “அரசின் கொள்கையின் அடிப்படையில் தான் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. ‘சாதாரண’ மற்றும் ‘தட்கல்’ என இரண்டு வகைகளில் திட்டம் செயல்படுகிறது. நாங்கள் தனிப்பட்ட முறையில் இணைப்பு தர முடியாது,” என்றார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பிஎஸ்ஜி மருத்துவமனையில் மனநல மருத்துவ கருத்தரங்கு… தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்பு…

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் நடைபெற்ற மனநல மருத்துவ கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...