கோவை: கோவை உட்பட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
இதனிடையே நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம்.
கோவை மாவட்டத்திலும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்காலத்திற்கு ஏற்ற ரெயின் கோட்கள்


















