கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரத்த தானம் செய்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது அன்னதானம் வழங்குவது போன்ற நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இன்று காலை கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரத்த தானம் செய்தார். அவரைத் தொடர்ந்து ஏராளமான அதிமுக தொண்டர்களும் ரத்த தானம் செய்தனர்.

