சட்டமன்றத் தேர்தல் – கோவையில் தகவல் தொடர்பு மையம் திறப்பு…

கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தகவல் தொடர்பு மையம் திறக்கப்பட்டது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026-ஐ முன்னிட்டு மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாக்காளர்களின் புகார்களை பெறும் பொருட்டும், சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் தகவல்கள் வழங்கும் பொருட்டு மாவட்ட தொடர்பு மையத்தினை (District Contact Centre) மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பவன்குமார் வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்தி வாகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026-ஐ முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாக்காளர்களின் புகார்களை பெறும் பொருட்டும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் தகவல்கள் வழங்கும் பொருட்டும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் (District Contact Centre) அமைக்கப்பட்டுள்ளது. இம்மையமானது இன்று முதல் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.

Advertisement

இதற்காக 12 தொழிற்நுட்பப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடைமுறை தொடர்பான வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் பணியாற்ற உள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. தமிழக வெற்றி கழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...