கரூரில் பராமரிப்புப் பணிகள்; ரயில் சேவைகளில் மாற்றம்!

கரூர்: கரூர் அருகே உள்ள மூர்த்திபாளையம் ரயில்வே யார்டில் வரும் ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கீழ்க்கண்ட ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன:

Advertisement

Single Content Ad

ரயில் எண். 56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில்: திருச்சிராப்பள்ளி ஜங்ஷனில் இருந்து காலை 07.20 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த நாட்களில் கரூர் ஜங்ஷனில் இருந்து ஈரோடு ஜங்ஷன் வரை இந்த ரயில் இயங்காது.

ரயில் எண். 16846 செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ்: செங்கோட்டையில் இருந்து காலை 05.10 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கரூர் ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த நாட்களில் கரூர் ஜங்ஷனில் இருந்து ஈரோடு ஜங்ஷன் வரை இந்த ரயில் இயங்காது.

ரயில் எண். 16843 திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்: திருச்சிராப்பள்ளி ஜங்ஷனில் இருந்து மதியம் 13.00 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கரூர் ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும். மூர்த்திபாளையத்தில் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் கரூர் ஜங்ஷனில் இருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

ரயில் எண். 16321 நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ்: நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கரூர் ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும். மூர்த்திபாளையத்தில் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் கரூர் ஜங்ஷனில் இருந்து கோவை ஜங்ஷன் வரை முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

கீழ்க்கண்ட ரயில் சேவையின் புறப்படும் நிலையம் மாற்றியமைக்கப்படுகிறது:

ரயில் எண். 16845 ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்: ஈரோடு ஜங்ஷனில் இருந்து மதியம் 14.00 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஈரோடு ஜங்ஷனில் இருந்து புறப்படாது. மாறாக, இந்த நாட்களில் கரூர் ஜங்ஷனில் இருந்து மதியம் 15.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை வரை இயக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Recent News

Single Sidebar Ad

Latest Articles