கோவை: கோவையில்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Advertisement

ஜூன் 2025 மாதத்திற்கான பயிற்சி 5 வியாழக்கிழமை அன்று அளிக்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விழைவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) (வரி கட்டணம் உட்பட) நேரிடையாக செலுத்த வேண்டும்.
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி நேரம்:
காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை.
மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422-6611336, 0422-6611226
அலைபேசி: 9629496555; 6379298064
மின்னஞ்சல்: pathology@tnau.ac.in
இவ்வாறு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.