கோவை: கோவையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றதேர்தல் -2026 பணியில் ஈடுபட உள்ள 366 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பானது இன்று ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் க.கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.
இப்பயிற்சி வகுப்பில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தேர்தல் (வட்டாட்சியர்) தணிகைவேல் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தேர்தல் தொடர்பான விதிமுறைகள். மண்டல அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் ஆகியவை குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

