மர்மக் காய்ச்சல்: கோவை மக்கள் அச்சப்பட வேண்டாம் – கலெக்டர்!

கோவை: கோவையில் மர்மக் காய்ச்சல் பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

சீதோஷண மாற்றத்தால் குழந்தைகள், பொதுமக்கள் பலரும் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே சென்னை, கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவிவருவதாக தகவல் பரவியுள்ளது.

இதனால் கோவையில் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறுகையில், “கோவையில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த அச்சம் இல்லை. மக்கள் பீதி அடையத் தேவையில்லை.

சுகாதாரத் துறை அதிகாரிகள் பகுதி வாரியாக பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் தினசரி உள் நோயாளிகள் அனுமதி கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...