கோவை ராம் நகரில் விபசாரம்!

கோவை: ராம் நகரில் உள்ள தங்கும் விடுதியில் விபசாரம் நடத்தி வந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காந்திபுரம் ராம் நகரில் தனியார் விடுதி உள்ளது. இங்கு வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்று வருவதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஓட்டல் அறையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்கள் நேபாளை சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.

சாய்பாபா காலனியில் ஓரினச் சேர்க்கைக்கு வரவழைத்து செல்போன் பறிப்பு!

News Clouds Coimbatore

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பாலியல் புகாரில் கோவை பெண் எஸ்ஐ மீது வழக்கு

கோவை நான்காவது பட்டாலியன் பாலியல் புகார் வழக்கில், கமாண்டன்ட்டை தொடர்ந்து பெண் எஸ்ஐ புஷ்பகுமாரி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.