கோவை: ரமலான் நோன்புக்கு தேவைப்படும் பச்சரிசி பட்டியலை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டுகளை போலவே 2026-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்று வருகின்றன.
2026-ஆம் ஆண்டு ராமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்கள் நோன்பு கஞ்சி வழங்குவதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி பெறுவதற்கு, சென்ற ஆண்டு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி பெற்ற பள்ளிவாசல்களிடமிருந்து தேவைப்பட்டியல் வரவேற்கப்படுகிறது.
எனவே பள்ளிவாசல் மொத்த அனுமதிபெற உரிய தேவைப்பட்டியலை கோயம்புத்தூர் மாவட்ட வழங்கல் சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அலுவலகத்தில் உடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

