கோவை: பண்டிகை காலத்தில் பயணிகள் நெரிசலை சமாளிக்க, பிகாரின் பரவுனி நிலையத்திலிருந்து எர்ணாகுளம் நோக்கி சிறப்பு ஒரு வழி ரயில் இயக்கப்பட உள்ளது.
பரவுனி – எர்ணாகுளம் ஒரு வழி சிறப்பு ரயில் (05271) பரவுனியில் இருந்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, நவம்பர் 3-ஆம் தேதி காலை 6.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.
இது ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயங்கும்.
வகுப்புகள்
- ஏசி 3-டயர்
- ஏசி 3-டயர் எகானமி
- ஸ்லீப்பர்
- சாதாரண இரண்டாம் வகுப்பு
- மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி
- பார்சல்
ரயில் நிலையங்கள்
- மோகாமா
- பட்ணா
- டானாபூர்
- பிரயாக்ராஜ்
- ஜபல்பூர்
- நாக்பூர்
- விஜயவாடா
- பெரம்பூர்
- கட்பாடி
- ஜோலார்பேட்டை
- சேலம்
- ஈரோடு
- திருப்பூர்
- போத்தனூர்
- பாலக்காடு
- திரிசூர்
- அலுவா



