கோவையில் 598 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள்…

கோவை: கோவையில்
598 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி பராஜ்குமார் வழங்கினார்.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 598 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை ரூ.21.71 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சூலூர் பேரூராட்சிதலைவர் தேவி மன்னவன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி பராஜ்குமார் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம்சூலூர் உள்வட்டமான காடாம்பாடி. கண்ணம்பாளையம், ராசிபாளையம், சூலூர்கலங்கல் ஆகிய கிராமம் பகுதிகளை சோர்ந்த 151 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், இருகூர் உள்வட்டமான இருகூர், ஒட்டர்பாளையம், பீடம்பள்ளி ஆகிய கிராமம் பகுதிகளை சோர்ந்த 215 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும்,

கருமத்தம்பட்டி உள்வட்டமான அரசூர், காடுவெட்டிபாளையம், கணியூர், கரவழிமாதப்பூர், கருமத்தம்பட்டி, மோப்பிரிபாளையம், மைலம்பட்டி நீலம்பூர், செம்மாண்டம்பாளையம் ஆகிய கிராமம் பகுதிகளை சோர்ந்த 172 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், செலக்கரிச்சல் உள்வட்டமான பச்சாபாளையம் கிராமம் பகுதிகளை சோர்ந்த 59 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும் மற்றும் வாரப்பட்டி உள்வட்டமான வாரப்பட்டி கிராமம் பகுதிகளை சோர்ந்த 01 பயனாளிகளுக்கு என மொத்தம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 598 பயனாளிகளுக்கு வீட்டுமனைபட்டாக்கள் ரூ.21.71 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் அவ்வளவு தான்- கோவையில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் அச்சம்…

கோவை: சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தள்ளுவண்டி கடையினர் உள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடை நடத்த முடியாமல் போய்விடும் வாழ்வாதாரம் பெரியதளவு பாதிக்கப்படும் என்று சாலையோர தள்ளுவண்டி கடையினர்...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.