கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையம் அருகில் கடந்த மாதம் 2-ந் தேதி கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன் மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேரை பீளமேடு போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கைதான 3 பேரும் நீதிபதி விஜயா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இது பாலியல் தொடர்பான வழக்கு என்பதால் மகளிர் கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு நீதிபதி விஜயா ஒத்திவைத்தார்.

