அப்பாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை- கோவையில் சண்முக பாண்டியன் பேட்டி…

கோவை: அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகர் சண்முக பாண்டியன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கொம்பு சீவி திரைப்படத்தை சண்முக பாண்டியன் உட்பட படக்குழுவினர் ரசிகர்களுடன் பார்த்து குழுவினர் பார்த்து ரசித்தனர்.

கோவை சாந்தி திரையரங்கில் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள கொம்பு சீவி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இதனை ரசிகர்களுடன் படத்தின் இயக்குனர் பொன்ராம் நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் படக் குழுவினர் பார்த்தனர். முன்னதாக தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக ஜமாப் அடித்தும், பட்டாசு வெடித்தும்,ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர். முன்னதாக ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் இசைக்கு ஏற்றவாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி மகிழ்ந்தனர்.

Advertisement

தொடர்ந்து திரையரங்கில் திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர் குடும்பத்தின் பெண் குழந்தைக்கு விஜயலதா என பெயர் சூட்டினார். முன்னதாக திரையரங்கிற்கு வந்த சண்முக பாண்டியனை வரவேற்க காந்திபுரம் தேமுதிக நிர்வாகிகளுக்கும் கவுண்டம்பாளையம் தேமுதிக நிர்வாகிகளுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சண்முக பாண்டியன் கோவையின் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அப்பா விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை படுகிறேன் என்றும் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை ஈசியாக எடுக்க முடியாது சரியான இயக்குநர் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கூறினார்.

Advertisement

அரசியலில் தற்போது நாட்டம் இல்லை என்றும் சினிமாவில் தான் கவனம் செலுத்துவேன் எனவும் கூறினார். அப்பாவுடன் சரத் சார் நடித்துள்ளார் அவருடன் நடித்தது எனக்கு நல்ல அனுபவம் கிடைத்ததாகவும் கூறினார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...